அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரஹானே அறிவிப்பு!
இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த துடுப்பாட்டவீரரும் முன்னாள் துணைத் தலைவருமான அஜிங்கிய ரஹானே, சர்வதேசக் கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் ரஹானே, தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவின் மூலம் இந்த ஓய்வு முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
“வாழ்க்கையில் தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்று இருக்கும்; சரியான நேரத்தில் விலகுவதே முறையானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 5,077 ஓட்டங்களையும், 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் உட்பட 2,962 ஓட்டங்களையும், 20 இருபது20 போட்டிகளில் 375 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.
2020-2021 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், இந்திய அணி பல முன்னணி வீரர்கள் இன்றித் தவித்த போது, அணியை வழிநடத்தி 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைக் கைப்பற்றிக் கொடுத்தவர் ரஹானே என்பது குறிப்பிடத்தக்கது.