உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களினால் நடைபவனி முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
95 பார்வைகள்

நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நேர்மை கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் நடைபவனி இடம்பெற்றது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமான குறித்த நடைபவனி பிரதான பாதையூடாக மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து குறித்த நடைபவனி மன்னார் நகர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

குறித்த நடைபவனியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பணியாளர்கள், பிரதேச செயலக பணியாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிஸார், இராணுவம், சுகாதார துறையினர், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

அரச சேவையில் நேர்மை பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நேர்மை வாரம் நேற்று திங்கட்கிழமை (27) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் குறித்த நடைபவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0