உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு; தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
90 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின் என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும் தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால், அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் பேரவை கூட்டணியின் பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் பெயரீடு.!

தமிழ் – முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

25 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய…

22 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; அப்பகுதியில் பரபரப்பு.!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF)…

48 0 0