உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

செம்மணி புதைகுழியில் மண்டையோடுகள் இன்றி மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
77 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதிதாக 13 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சில மனித என்புத் தொகுதிகள் மண்டையோட்டுத் தொகுதி இன்றிக் காணப்பட்டன.

இதேவேளை, நேற்றைய அகழ்வின்போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3 என்புத் தொகுதிகள் உட்பட மொத்தமாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின்போது சில மனித என்புத் தொகுதிகள் மண்டையோட்டுத் தொகுதி இன்றிக் காணப்பட்ட அதேவேளை, மேலும், சில இடங்களில் மண்டையோட்டுத் தொகுதிகள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புகள் மற்றும் மண்டையோட்டுத் தொகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது குறித்த மேலதிக தகவல்கள், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவின் ஆய்வுகளுக்குப் பின்னரே உறுதியாகத் தெரியவரும்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

38 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

41 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

74 0 0