உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

33 பார்வைகள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்குத் தலா 300 ரூபாய் அபராதமும்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணைக்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து  பொலிஸ் நிலையத்தின் பல்வேறு  குற்றத்தடுப்பு பிரிவு  பொறுப்பதிகாரி    உப  பொலிஸ் பரிசோதகர்  கே.எல்.எம் முஸ்தபா    அவர்களைத் தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்களும் ஏனையோரும் வேடிக்கை பார்க்கும் வகையில் இரு தரப்பினரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

இதனை அவதானித்த கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்திற்காக இரு தரப்பையும் சேர்ந்த 5 பேரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்ற உத்தரவிற்கமைய  பொலிஸ் நிலையத்திலுள்ள இரு வேறு சிறைக்கூடுகளில் அடைத்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு 5 சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (20) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணையின் போதுஇ சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டுச் சமாதானமாகச் செல்ல விரும்புவதாக மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் வழக்கை விசாரித்த நீதிவான் 5 சந்தேகநபர்களுக்கும் தலா 300 ரூபாய் அபராதம் விதித்தார்.

அத்துடன்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

59 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

46 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

45 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

83 0 0