உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
42 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  க . கனகேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் திரு. ஜகத் லியனாராச்சி அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது அதிகாரிகளின் கடமைகள், தகவல் கோரிக்கைகளை உரிய காலவரையறைக்குள் கையாளுதல், தகவல் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் தகவல் வழங்கும் செயற்பாட்டில் அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்களை சட்டத்திற்கு அமைவாக கையாளுதல் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், அரச நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், தகவல் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொது அதிகாரிகளின் பொறுப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, அரச நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கிய பங்காற்றுவதாகவும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

39 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

75 0 0
இலங்கை செய்திகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார் சுமந்திரன்

தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.…

17 0 0