உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு!

உலக செய்திகள் 10 மணி நேரம் முன்
25 பார்வைகள்

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth ) செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்;

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் தங்களது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள பெரும் சவாலை எதிர்கொள்ளக்கூடிய இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.

இந்த நிலையில், மக்கள் விரும்பாத ஈரான் போரை குறைந்த விலையுடன் தொடர்புபடுத்த ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பொதுக் கருத்துக் கணிப்புகளில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

வொஷிங்டனில் நடைபெற்ற விசாரணையின்போது, 37.5 பில்லியன் டொலர் தொகையானது போரின் சில அம்சங்களையும், செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான எதிர்பார்க்கப்படும் செலவுகளையும் உள்ளடக்கியது என்று ஹெக்ஸெத் சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்தார்.

எனினும், பென்டகன் இந்தத் தொகையை எவ்வாறு கணக்கிட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

போரின் முதல் ஆறு நாட்களுக்குக் குறைந்தது 11.3 பில்லியன் டொலர் செலவானதாக ட்ரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டிருந்ததாக கடந்த மார்ச் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் தொடர்பான மோதலுக்கான செலவுகளே இதில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில், ஏறக்குறைய 90 பில்லியன் டொலர் கூடுதல் நிதியை வழங்குமாறு ட்ரம்ப் கடந்த மாதம் நாடாளுமன்றத்திடம் கோரினார்.

இது, போரினால் அதிருப்தியில் உள்ள மற்றும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மற்றொரு மோதலுக்கான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தப் போர், பென்டகனின் ஏறக்குறைய 1 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், இராணுவப் பணியாளர்கள் தொடர்பான விவகாரங்களுக்கான நிதியுதவிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டுவீசத் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் அல்லது தனது திட்டங்கள் குறித்து ட்ரம்ப்பும் அவரது குழுவினரும் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்புச் சட்டமியற்றுபவர்களும் குறை கூறியுள்ளனர்.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அவைகளில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் மிகக் குறைந்த பெரும்பான்மையையே கொண்டுள்ளதால், நிதி ஒதுக்கீடு சட்டமூலங்கள் நிறைவேற வழக்கமாக ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு தேவைப்படுகிறது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!

டொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையான Hospital for Sick Children (SickKids)-இல் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான இணையவழி…

33 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கன மழை – 20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நுரிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

32 0 0
உலக செய்திகள்

சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை பிரான்ஸ் தடை செய்துள்ளது!

2027 ஜனவரி முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், இளைஞர்கள் இத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்…

18 0 0
உலக செய்திகள்

AI மூலம் முதலாம் உலகப் போர்க் கதைகளுக்கு உயிரூட்டும் பாடசாலை மாணவர்கள்!

இங்கிலாந்தின் ட்ரூரோவில் உள்ள பெனாயர் பாடசாலையைச் சேர்ந்த வரலாற்று மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாம் உலகப் போர் வீரர்களின் நாட்குறிப்புகளைத் குறும்படங்களாக உருவாக்கியுள்ளனர்.…

17 0 0