ஆப்கானிஸ்தானில் கன மழை – 20 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நுரிஸ்தான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பரன் பகுதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெள்ள அனர்த்தத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கனமழை தொடரும் அபாயம் நிலவுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிவாரணப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.