உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு : 10 பேர் உயிரிழப்பு

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
25 பார்வைகள்

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 15க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் மாநிலத்தின் அமைந்துள்ள தீஸ்தா கட்டம்-VI (Teesta Stage-VI) நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுரங்கத்துக்குள், பாறைகளுக்கு இடையில் தேங்கியிருந்த மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட போது, திட்டப் பணிகளுடன் தொடர்புடைய பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் சுரங்கத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சுரங்கத்திற்குள் காணப்படும் நச்சு வாயுக்கள், அதிகளவிலான புகை மற்றும் அந்த பகுதியில் நிலவும் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கர்நாடகாவில் தவளைகளுக்குத் திருமணம் – மழையை வேண்டி வினோத வழிபாடு!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர்…

25 0 0
இந்திய செய்திகள்

டெல்லிக் கலவரம் குறித்து தாம் முன்னரே எச்சரித்ததாக அமெரிக்கத் தூதரகம் தெரிவிப்பு!

இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து…

22 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் பதற்றம் – ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட…

92 0 0
இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

33 0 0