உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

கர்நாடகாவில் தவளைகளுக்குத் திருமணம் – மழையை வேண்டி வினோத வழிபாடு!

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
25 பார்வைகள்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன் விவசாயப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடிநீருக்காகப் பெண்கள் தினமும் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் நிலை தொடர்வதோடு, மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன் கால்நடைகளும் சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில், ஊரில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அந்த பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி வினோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு தவளைகளைப் பிடித்து வந்து, அவற்றுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் திருமணம் செய்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடும் பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.

இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறுகையில், “வறட்சி காலங்களில் தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கையாகும்.

தற்போது கடும் நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் இந்த வழிபாட்டை நடத்தினோம்” எனத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்தியாவில் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் வெடிப்பு : 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாகவும்…

24 0 0
இந்திய செய்திகள்

டெல்லிக் கலவரம் குறித்து தாம் முன்னரே எச்சரித்ததாக அமெரிக்கத் தூதரகம் தெரிவிப்பு!

இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து…

22 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் பதற்றம் – ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட…

92 0 0
இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

33 0 0