உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணையை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
88 பார்வைகள்

பநீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படவில்லை என்றும், நீத்து அமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தியற்றவை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

ஜூலை மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், நாளை பிரேரணையைச் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை கையளிக்க முடியாவிட்டால், இந்த நாடாளுமன்ற வாரத்துக்குள்ளேயே நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அவசரமானதாகக் கருதி, நாடாளுமன்றத்தில் விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை வலியுறுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

42 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

42 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

75 0 0