உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்.!

88 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

குருநாகலில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கை வரலாற்றில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இந்த மரணம் பெரும் சந்தேகத்துக்குரியது. சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழக்கின்றமை சமூகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சி.டி. விக்கிரமரத்ன பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறான பின்னணியில், இந்த மரணத்தைத் தற்கொலை என்று முத்திரை குத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் முறையற்றதொரு செயற்பாடாகும். இந்த மரணம் குறித்து அரசு உரிய விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

53 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

62 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

50 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

66 0 0