உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கபில சந்திரசேனவின் மனைவிக்கு சர்வதேச பிடியாணை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
129 பார்வைகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராக, சர்வதேச திறந்த பிடியாணையைப் பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாசான் அமரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, நீதிவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா விஜேநாயக்கவுக்கு ஆங்கிலத்தில் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கோரப்பட்டதை நீதிவான் ஏற்றுக்கொண்டார்.

இதன்போது, பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் பிணைதாரர்களாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டியுள்ளமையால் அவர்களைப் பிணைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரினார். அத்துடன், 10 மில்லியன் ரூபா பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்யவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.

இருப்பினும், வழக்குக் கோப்புகளை ஆராய்ந்த நீதிவான், பிணைப் பணமாக வைப்பிலிடப்பட்ட தொகை 10 மில்லியன் ரூபா அல்ல, 20 மில்லியன் ரூபா என்பதைச் சுட்டிக்காட்டினார். பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு முன்னதாக, அதற்கான காரணங்களை எழுத்து மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டார்.

இதன்படி, மேற்படி இரு பிணைதாரர்களையும் பிணைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க நீதிவான் அனுமதி அளித்ததுடன், பிணைப் பணத்தை அரசுடமையாக்குவது தொடர்பான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்கவும் பணித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, தற்போது உயிரிழந்துவிட்டார் என்பதும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

65 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

55 0 0