உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு ‘புரோக்கர்’ கூட்டு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
107 பார்வைகள்

தமிழ் பேசும் கட்சிகள் நேற்றுமுன்தினம் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல என்றும், அவை வெறும் ‘புரோக்கர்’ (தரகு) வேலைகளே என்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
“தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர். இவர்கள் ஏன் தங்களின் சொந்தத் தாயகமான தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள். இவர்களின் பிள்ளைகள் தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். அதற்கு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள். மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள். எனவே, இது மக்களுக்கான கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில் சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்.” – என்று அவர் சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0