உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

திடீரென பரவிய காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
23 பார்வைகள்

தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா பிராந்தியத்தில் உள்ள அல்மேரியா மாகாணத்தில் திடீரெனப் பரவிய காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 19 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வியாழக்கிழமை மதியம் லாஸ் காஸார்டோஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, பலத்த காற்று மற்றும் ஐரோப்பா முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு அதிவேகமாகப் பரவியது.

தீயில் சிக்கித் தப்பிக்க முயன்ற போது வாகனங்களுக்குள்ளேயே மாட்டிக்கொண்டு பலர் உயிரிழந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கோர விபத்தில் காயமடைந்த 6 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் பிரிவு (UME) உட்பட 300-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பலத்த புகைமூட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள இரு முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பிராந்தியத்தில் மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் மண்சரிவு; பலர் உயிரிழப்பு.!

பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் ‘பாவி’ சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸில் ‘இண்டே’ (Inday) என…

9 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் 20 வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தல்!

பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 28-ஆம் திகதி நடைபெறும் என பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள…

9 0 0
உலக செய்திகள்

காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொ*லை வழக்கில் 24 பேர் கைது!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 24…

8 0 0
உலக செய்திகள்

ஜெர்மனியில் வெப்பநிலை அதிகரிப்பால் சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொதுச் சுகாதார மற்றும் தொற்றுநோய் ஆய்வு நிறுவனமாக ரொபர்ட் கோச் (RKI)…

1 0 0