சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
மகேந்திரா கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (11) காலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுகுடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த மகேந்திரா ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவு சென்று கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் விபத்துக்குள்ளானது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.