கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை.!
கட்டுநாயக்கவிலிருந்து இன்று சனிக்கிழமை (11) காலை துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட ‘A330’ ரக பயணிகள் விமானத்தின் மீது பறவையொன்று மோதியுள்ளது.
இதனால் ஏற்பட்ட அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானத்தின் எடையைக் குறைக்கும் நோக்கில், சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தற்போது எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.