உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

17 பார்வைகள்

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களுடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
கடந்த 5 ஆம் திகதி யாழ்.இந்துக் கல்லூரிக்கு அண்மையில் ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல், அவ் இளைஞனின் உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கார் வேகமாக சென்றபோது வீதிக்கடமையில் இருந்த பொலிஸார் இடைமறித்தும் நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.

இதனால் சந்தேகமுற்ற பொலிசார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர்.

சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டதுடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கடத்தலுடன் தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் மஹாவலி கங்கையில் மூழ்கி சிறுவன் ஒருவன் இன்று(11) காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும்…

13 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச்…

24 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்.!

இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின்…

37 0 0
இலங்கை செய்திகள்

தீயணைப்பு சேவையின் அவசர இலக்கம் செயலிழப்பு.!

தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, தீ விபத்துகளைப் புகாரளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர…

39 0 0