மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியாசலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் அப் பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

