உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
69 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடே தவிர, அது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“சிறைச்சாலை வார்டுகளில் நூற்றுக்கணக்கான கைதிகள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. நானும் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைகளில் கைதியாக இருந்தவன் என்ற அடிப்படையில், அங்குள்ள ஆபத்தான சூழல்களை நன்கு அறிவேன். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இன்றும் உள்ளன.

சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்பது ஒரு தரப்பினரின் வாதமாக இருந்தாலும், அங்குள்ள அடிப்படை சூழல் குறித்து இருவேறு கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகின்றன.

இதேவேளை, சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சரின் முடிவை மனதாரப் பாராட்டுகின்றேன்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பாரிய பேரழிவுகளுக்குக் கூட பொறுப்பானவர்கள் எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. அத்தகைய சூழலில், இந்தச் சம்பவத்துக்குத் தான் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் தைரியமாக முன்வந்தமை போற்றத்தக்கது. வெளிநாடுகளில் அசம்பாவிதங்களுக்குத் தலைவர்கள் பொறுப்பேற்பதைப் போலவே, உள்நாட்டிலும் நீதி அமைச்சர் காட்டிய இந்தத் துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0