உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
59 பார்வைகள்

கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதுல்கோட்டேயிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல, அரசின் இந்தத் தீர்மானம் எவ்வித தொலைநோக்குப் பார்வையுமின்றி எடுக்கப்பட்ட ஒன்று என்று சாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கண்டி நகரின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டே 2014 ஆம் ஆண்டு இந்தச் சிறைச்சாலை மூடப்பட்டது. தற்போது இதனை மீண்டும் திறப்பது கண்டி நகரின் அபிவிருத்திப் பாதையைத் தடுத்து, நகரின் மையப்பகுதியின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கட்டடத்தைப் புனரமைக்க அரசு பில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிட நேரிடும். இந்த நிதியை தும்பறை சிறைச்சாலையின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவதுதான் அறிவுடைமை.

கண்டி நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பொதுமக்களால் இலகுவாக அணுகக்கூடிய இந்தப் பகுதி, சிறைச்சாலையாகச் செயற்படுவதற்குப் பாதுகாப்பு ரீதியாகப் பொருத்தமற்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள் இங்கும் நிகழ வாய்ப்புள்ளது.

நல்லாட்சி அரசின் காலத்தில் திட்டமிட்டபடி, இந்த இடத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட வணிக மற்றும் கலாசார மையமாக மாற்றினால், சுமார் 2 ஆயிரம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ள நிலையில், 42 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 75 சதவீதமானோர் விளக்கமறியலில் உள்ளவர்கள்.” – என்றார்.

இதேவேளை சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பின்வரும் மாற்று வழிகளை முன்மொழிந்தார்.

* பிணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் ஏழைக் கைதிகளுக்கு அரசு தலையிட்டுத் தீர்வு காணுதல்.
* வெளிநாடுகளைப் போல் பிணை நிதியத்தை நிறுவுதல்.
* வீட்டுக் காவல் முறையை அறிமுகப்படுத்துதல்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கு இத்தகைய மாற்று வழிகளை ஆராயாது, போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்க அரசு எடுத்துள்ள தீர்மானம் கண்டிக்கத்தக்கது என்றும், இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் அரசிடம் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0