உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு மோதலைத் தொடர்ந்து அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த மற்றொரு கைதி, திடீர் உடல்நலக்குறைவனால் காலி தேசிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய மோதலை தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவிய நெருக்கடியைக் குறைப்பதற்காக அங்கிருந்த 1,033 கைதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை முன்னின்று நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூசா அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0