தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல்!
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் “பல்கலைக் கழகமாக” 1996.05.15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு 2026.05.15ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
“Pearl Jubilee Anniversary” எனப் பெயரிடப்பட்ட இம்முத்து விழா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் முப்பது ஆண்டுகால பணிச்சேவையையும் நினைவுகூரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வு ஆரம்பகால ஊழியரும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான எஸ்.ஏ.சி.எம். ஜுனைடீன் நெறிப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால ஊழியரும் தற்போதைய சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
