உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யூசி மாஸ் மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா; சாதனை மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் மன்னார் மற்றும் முருங்கன் மையங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (26) மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை மாலை யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

யூசி மாஸ் (UCMAS) மன்னார் நிறுவனத்தின் இயக்குனர் நடராஜா கேதீஸ்வரன் மற்றும் திருமதி யசோதா கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை வங்கி, மன்னார் கிளையின் முகாமையாளர் ஐ. அருளானந்தன் சோசை கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக முருங்கன் ஆரம்பப் பாடசாலை அதிபர் ஏ.ஆர். தேவநேசன், மன்னார்/எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். அஸ்மி, மன்னார்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் சாந்தியாகு F.S.C, மன்னார் லா சால் ஆங்கில பாடசாலை உப அதிபர் அருட்சகோதரர் பிரிட்டோ பின்டோ F.S.C, மன்னார் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சி.பி. வின்சென்ட், மன்னார் மாவட்ட செயலக கணக்காளர் எஸ். செல்வகுமார், இலங்கை யூசி மாஸ் செயற்பாட்டு பணிப்பாளர், தலைமை நடுவர் திருமதி. சித்ரா இளமநாதன், யூசி மாஸ் இலங்கை கிளை உரிமைப் பணிப்பாளர், திருமதி தயாளினி பாசங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கடந்த வருடம் ஜோர்ஜியாவில் நடைபெற்ற யூசி மாஸ் சர்வதேச மட்ட போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி வெற்றிக் கேடயம் வழங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களினால் வெற்றி கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யூசி மாஸ் (UCMAS) மன்னார் மற்றும் முருங்கன் கிளையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0