உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வாகனத் தரிப்பிட கட்டண அறவீடு; கொழும்பு மாநகரில் மீண்டும் அமுல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டண அறவீட்டு நடைமுறைகள், நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது என்று கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

சில நிர்வாக காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக கட்டணம் அறவிடும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், நாளை முதல் வழமை போன்று மாநகர சபையின் அங்கீகாரம் பெற்ற உத்தியோகத்தர்களால் கட்டணங்கள் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிப்பிடக் கட்டணங்களைச் செலுத்தத் தவறுபவர்கள் மற்றும் உரிய தரிப்பிட விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, கொழும்பு நகருக்குள் வாகனங்களை நிறுத்தும் வாகனச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள், மாநகர சபையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0