வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து அப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் குறித்த வீட்டில் வசித்த நபரின் உறவினருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்த ஆண் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் சடலமாக காணப்பட்டவர் செம்பியன்பற்று வடக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செபமாலை செல்வசிங்கம் என தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.