ஆற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு.!
காலி – நெலுவ, மாதுகெட பகுதியில், கிங் கங்கையின் கரையில் இருந்து நேற்று சனிக்கிழமை (21) மாலை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நெலுவ, படுவன்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக நெலுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நீதிவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.