மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; மூவர் கைது.!
கந்தானை நகரில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை கந்தானை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (21) இரவு கந்தானை பொலிஸாரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் சந்தேகநபர்களான பெண்கள் கொலம்பகே-ஆர மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 41 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.