உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை கிடைக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்; இடைத்தரகர்கள் அதிக லாபம் பெறும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். உற்பத்தியாளர்களுக்கே நியாயமான வருமானம் கிடைக்கும் போதே வடக்கு மாகாணம் முழுமையாகத் தன்னிறைவு அடைய முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


‘வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்’ வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (21) யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில், மன்றத் தலைவர் எஸ். நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழில்துறைகளின் நிலையான அபிவிருத்தி இல்லாமல் மாகாண முன்னேற்றம் சாத்தியமில்லை என்றும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் ஏற்றுமதி நோக்கில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அதற்கான ஊக்கத்தை அரசு வழங்க வேண்டும் என்றும், அரச திணைக்களங்களின் அணுகுமுறைகளில் மேலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார்.


நிதி ஒதுக்கீடுகள் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், போருக்குப் பிந்தைய காலத்தில் தொழில்முயற்சிகள் வளர்ச்சி கண்டுள்ள போதிலும், கடன் வசதிகளைப் பெறுவதில் இன்னமும் சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ‘முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப்படும் கடன் திட்டங்களில் வடக்கு மாகாண தொழில்முயற்சியாளர்கள் பின்னடைவைச் சந்திக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.


இதற்கான தீர்வாக, வடக்கு மாகாணத்திற்கென தனி கடன் ஒதுக்கீடு கோரப்படவுள்ளதாகவும், தேவையான ஆவணங்களைத் தயாரிக்க பல்கலைக்கழகங்களின் ஊடாக உதவி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இந்தியாவிலிருந்துவடக்கு மாகாணத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறினார்.

கொழும்பு – யாழ்ப்பாண பயண நேரத்தை குறைப்பது அவசியம் எனவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு பயண முனையம் அமைப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், கொக்கிளாய் – புல்மோட்டை பாலத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டாளர்களுக்கு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் “ஒற்றை சாளரம் முறை” (Single Window System) அறிமுகப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதரகத்தின் பிரதிநிதிகள், அரச திணைக்கள அதிகாரிகள், வங்கி அதிகாரிகள்,தொழில்முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0