உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வேல்முருகு ஆசிரியரின் 38வது நினைவு தினம் பாண்டிருப்பில் அனுஷ்டிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38வது நினைவு தினம் இன்று அவரது சொந்த ஊரான கல்முனை பாண்டிருப்பில் அனுசரிக்கப்பட்டது.


அவரது மனைவி, மகள் தமிழ்ச்செல்வி மற்றும் பேரப்பிள்ளைகள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, “வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பு” ஒருங்கிணைப்பில், அதன் மாவட்ட பொறுப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதிபன் தலைமையில் நடைபெற்றது.


1988 மார்ச் 20ஆம் திகதி ஒட்டுக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வேல்முருகு ஆசிரியர், அம்பாறை மாவட்ட மக்களின் உரிமைக்காக பல்வேறு துறைகளில் செயல்பட்ட முக்கியப் பொதுநலப் போராளியாகக் கருதப்படுகிறார்.


நினைவு நிகழ்வு பாண்டிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள மகாவிஷ்ணு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டது.


அவரது மனைவி முதலில் சுடரை ஏற்றியதையடுத்து, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் உள்ளிட்டோர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


நிகழ்வின் போது, வேல்முருகு ஆசிரியரின் சேவைகள் குறித்து பலர் கருத்துரைத்ததுடன், அவரது பெயரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை மறுசீரமைத்தல், கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல், அவரது திருவுருவச் சிலையை நிறுவுதல் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிடுதல் உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மயிலம்பாவெளி வாழும்கலை ஆசிரமம் மற்றும் திருப்பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லங்களிலும் உணவு வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0