உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கல்கிஸையில் விசேட சோதனை: ஆயுதங்களுடன் 15 சந்தேகநபர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் விசேட அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.


இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள அரலிய வீடமைப்புத் தொகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 5 கூர்மையான ஆயுதங்களும், சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள்கடத்தலில் ஈடுபட்டு வரும் ‘அல்டோ தர்மே’ என அழைக்கப்படும் எல்லாவல தர்மசிறி பெரேரா மற்றும் ‘சந்தோ’ என அறியப்படும் கவிந்து தனஞ்சய ஆகியோரின் குழுவுடன் தொடர்புடைய 11 பேரும், மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0