பொலிஸ் விசாரணைக்கு அச்சப்பட்டு மகிழுந்து சாரதி தீக்குளிப்பு.!
மஹரகம – பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அதன்போது செய்யவேண்டிய பொலிஸ் விசாரணையை முன் நோக்கி அச்சம் காரணமாக இவர் தீப்பற்றி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் மனைவி, கணவர் விசாரணைக்குச் செல்லவேண்டியதாக இருந்த போது மிகுந்த பயத்துடன் இருந்தார் என்று தெரிவித்தார். சம்பவ தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுப்பப்பட்டுள்ளது.