உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

துமிந்த சில்வாவிடம் வாக்கு மூலம் பெற நீதிமன்றம் அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

சட்டவிரோத பணமீட்டல் குற்றச்சாட்டில் கைதாகிய ‘தெமட்டகொட ருவான்’ தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா வழங்கிய உத்தரவின்படி, துமிந்த சில்வாவிடம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணியளவில் சிறைச்சாலையில் வாக்குமூலத்தை பதிவு செய்யப்படுவார்.

இதற்கு தனது சட்டத்தரணி முன்னிலையில் உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.முன்னதாக, கடந்த 13 ஆம் திகதியில் ஆணைக்குழு அதிகாரிகள் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெற முயன்றனர். ஆனால், தனது சட்டத்தரணியின் ஆலோசனை இல்லாமல் வாக்குமூலம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்து, அந்த முயற்சி தோல்வியடைந்தது.

தெமட்டகொட ருவனுக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக 50 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட முஹம்மது மொஹிதீன் சப்ராஸ் நவாஸ் வழக்கில், மேலதிக விசாரணை அறிக்கையைத் தரக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சப்ராஸ் நவாஸ் தொடர்பாக 31 ஆம் திகதி வரை விளக்கமறியல் நடைபெறும் என்றும், துமிந்த சில்வா தொடர்பான சாட்சிச் சுருக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0