உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழ். பல்கலைக்கழக பேராசிரியரை காணவில்லை; மகள், காதலன் தலைமறைவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையில் பேராசிரியராக கடமையாற்றி வந்த தயாலினி திலீபன் என்பவரை மூன்று நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி அரியாலையில் வசித்து வந்த தயாலினி திலீபன் எனும் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பேராசிரியரை மூன்று நாட்களாக காணவில்லை என தினகரனுக்கு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருகையில்,
குறித்த பேராசிரியரின் வீடு உடைக்கப்பட்டு கார் என்பன காணாமல் போயுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரான பேராசிரியர் தயாலினி திலீபன் மற்றும் அவருடைய மகளையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மகள் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காணாமல் போன காரில் இவர்கள் இருவரும் சென்று வங்கிக்கணக்கில் உள்ள பணத்தினை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், திருகோணமலையில் QR ஐ பயன்படுத்தி காருக்கான பெற்றோலை பெற்றுக்கொண்டு மகளும், மகளின் காதலனும் தலைமறைவாகி உள்ளனர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த பெண்ணின் தயாரான தயாலினி திலீபன் என்பவரை குறித்த சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்களாக காணவில்லை.

இது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0