சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உந்துருளி பாகங்கள்; ஒருவர் கைது.!
சுங்க வரி செலுத்தாது நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உந்துருளி பாகங்களுடன் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி – பிராண்டியாவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் வரியின்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 16 உந்துருளி பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பாகங்கள் உந்துருளிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சந்தேகநபர் வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.