மத்திய கிழக்குப் போரில் இலங்கை அரசு தெளிவற்ற நிலை – ஹக்கீம் குற்றச்சாட்டு.!
மத்திய கிழக்கில் நிகழும் போர்சூழலில் இலங்கை அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கி வருகிறது என்றும், புறநிலை பாதிப்புகளை தவிர்க்க “பூசி மெழுகு போக்கு” கடைபிடிக்கிறது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றிய அவர், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனக் குறிப்பிட்டு, “ஈரான் மீது எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தாக்குதல் நடக்கிறது. அவர்கள் ஆட்சிமுறையை ஏற்கவில்லை என்பதால் ஆன்மீக தலைவரைப் படுகொலை செய்துவிட்டு தாக்குகின்றனர்.
உலக நாடுகள் பல ஈரானுக்கே ஆதரவாக இருக்கின்றன. ஆனால் எமது அரசு அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காக தெளிவான முடிவை எடுக்கத் தயங்குகிறது” என்றார்.ஹக்கீம் மேலும், சர்வதேச கடல்எல்லையில் பாதிக்கப்பட்ட ஈரான் கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் 11 மணிநேரம் அனுமதி தாமதித்தது தவறான முன்னுதாரணமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அவர் அரசாங்கம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்துகொள்ளாதது ஈரானுக்கு எதிரான போரில் அரசாங்கத்தின் தெளிவற்ற வெளியுறவு கொள்கையின் காரணம் என்றும் குற்றச்சாட்டிட்டார்.ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்போது இலங்கைக்கு பாதிப்பு வராது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியதை ஹக்கீம் நிராகரித்து, இந்தியாவிடமிருந்து எரிபொருள் பெற்றாலும் அது ஹோர்முஸ் வழியாகவே வரவேண்டும் என்பதைக் அமைச்சர் புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் எச்சரித்து கூறியதாவது, ஹூதி படைகள் செங்கடலில் தாக்குதல்களை தீவிரப்படுத்தினால், இலங்கையின் பொருளாதாரபாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்.தலைப்புச் செய்தியில் ஹக்கீம் குறிப்பிட்டார்: “எதிர்க்கட்சியில் இருந்தபோது காட்டிய நடுநிலைமையை அநுர அரசாங்கம் தற்போது கடைபிடிக்கவில்லை. பலஸ்தீன மக்கள் கொல்லப்படும்போதும், தற்போது ஈரான் தாக்கப்படும்போதும் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குவது கவலையளிக்கிறது.”