வடமராட்சி கிழக்கு இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.!
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம், முன்தினம் (மார்ச் 17) வடமராட்சி கிழக்கு செம்பியன் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.நிகழ்வில் புத்தளம் மாவட்டத்திலிருந்து வருகை தந்த இளைஞர்கள், வடமராட்சி கிழக்கு செம்பியன் இளைஞர்கள் கழகத்தினரும், வடமராட்சி கிழக்கு இளைஞர்களும் அவர்களை அன்புடன் வரவேற்று நிகழ்வுகளைத் தொடங்கினர்.
இன்றைய (19) தினம், புத்தளத்திலிருந்து வருகை தந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள், வடமராட்சி கிழக்கின் வரலாற்றுப் பின்னணியால் உருவாக்கப்பட்ட கிராமிய விளையாட்டுகளை அனுபவித்து மகிழ்ந்தனர். அத்துடன், தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை புத்தள இளைஞர்கள் யுவதிகளுக்குச் சமைத்து வழங்கி, அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.பின்னர், வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் மற்றும் புத்தளம் இளைஞர்கள் செம்பியன் பற்று வடக்கு கடற்கரையில் மாலைப்பொழுதை கழித்தனர்.
நிகழ்வின் இறுதியில், செம்பியன் பொது நோக்கு மண்டபத்தில் இளைஞர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.இவ்வாறு, இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம், மகிழ்ச்சி, பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சமூக உறவை வலுப்படுத்தும் விதமாக வெற்றிகரமாக அமைந்தது.
