மத்திய கிழக்கு போரால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்.!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உருவாகியுள்ள பொருளாதாரச் சவால்கள் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
உலகளாவிய வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகச் சந்தையில் எதிர்பார்க்கப்படும் விலை மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், தடையற்ற வலுசக்தி விநியோகம், அத்தியாவசியப் பொருட்களின் விலை முகாமைத்துவம், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டங்கள் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத், குமார ஜயகொடிமத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சு செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும உள்ளிட்டோர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.