“சிங்ஹிந்தியா சமாதான யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடைபயணம்.!
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்து கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.