உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் எரிபொருளை சேமித்து வைத்திருந்த 70 வயதுடைய வர்த்தகர் ஒருவர் பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதிரிகிரிய – மீகஸ்வெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று புதன்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த சில நாட்களாகப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சிறுகச் சிறுக இந்த எரிபொருள் தொகையைச் சேகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களில், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே இவ்வாறு பதுக்கி வைத்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் அப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வரும் 70 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (19) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மீகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

71 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0