அனுமதிப்பத்திரம் இன்றி மரக்கடத்தல்; சாரதி கைது.!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலுக்கு அமைவாக இன்று அதிகாலை 3.00 மணியளவில் தர்மபுரம் பொலிஸாரின் திடீர் வீதிச் சோதனை மூலம் 40 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலைமரக்குற்றிகள் புளியம்பொக்கனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தடையப் பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

