உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் தற்காலிகமாக ரத்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக ரத்து செய்ய கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.இந்த அறிவிப்பை மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் இன்று வெளியிட்டார்.

உலகளாவிய யுத்தச் சூழலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வரின் ஆலோசனையின் பேரில், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், நிதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மாநகர சபை நிர்வகிக்கும் வாகன நிறுத்த இடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய தீர்மானத்தின்படி மறு அறிவிப்பு வெளியாகும் வரை அனைத்து வாகன நிறுத்த இடங்களிலும் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.


நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமை சீராகி, பொருளாதாரம் வழமைக்கு திரும்பிய பின்னர் இதுகுறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

65 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

67 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

58 0 0