உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று(18) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை கொடிச்சீலையானது கடல் நாச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

சுமார் 500 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த ஆலயமானது கிழக்கு மாகாணத்தில் பழமையானதும் தொன்மையானதுமான ஆலயங்களில் ஒன்றாகவும் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் உள்ளது.

ஆலயத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலையும் உற்சவ மூர்த்தியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொத்தம்பத்தில் நடைபெற்ற விசேட பூஜைகள் வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத வேதபராயணம் முழங்க மேளதாள இசையுடனும் கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கணேசாலயா நாட்டியபள்ளி மாணவர்களின் நடன ஆற்றுகையும் நடைபெற்றதை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். தினமும் தம்ப பூஜை, வசந்தமண்டப பூஜை, சுவாமி உள்வீதி, வெளிவீதியுலா நடைபெறும்.

குறிப்பாக முக்கிய திருவிழாக்களான மாம்பழத் திருவிழா, திருவேட்டைத் திருவிழா 31ஆம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன் மறுநாள் 01ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவமும் பொன்னூஞ்சலும் நடைபெற்று கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.

மகோற்சவ கால கிரியைகள் அனைத்தும் பிரம்மஸ்ரீ நித்திய சிவானந்தக்குருக்கள் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0