போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!
வீரம்புகெதர மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது, ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரம்புகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுகமுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 120 கிராம் ஹெரோயின் மற்றும் 75 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடமிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கலுகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபோதல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனையின் போது, 71 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மாபோதல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.