உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாட்டில் நிலவும் மின்சாரத் தேவையைச் சீராக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள மின்சாரப் பயன்பாட்டு நிலவரத்தை கருத்திற்கொண்டு, மின்சார வாகனங்களை மதிய நேரங்களில் மின்னேற்றம் (Charging) செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தெரிவிக்கையில்,

தினமும் இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்சாரத்திற்கான கேள்வி (Peak Demand) மிக அதிகமாகக் காணப்படுகிறது.

மாலை வேளைகளில் மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்வதன் காரணமாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 300 மெகாவாட் மேலதிக சுமை ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகல் நேரங்களில் சூரிய சக்தி உள்ளிட்ட புனர்நிர்மாணிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அந்த நேரத்தைப் பயன்படுத்தி வாகனங்களை மின்னேற்றம் செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள திட்டங்களின்படி மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும், எனினும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற நிச்சயமற்ற காரணிகளால் எதிர்காலத் தீர்மானங்கள் அமையலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறந்த எரிசக்தி முகாமைத்துவத்திற்காக விரைவில் ‘ஸ்மார்ட் மீற்றர்’ (Smart Meters) அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு, அதன் மூலம் பகல் மற்றும் இரவு நேரங்களுக்குத் தனித்தனியான கட்டண முறைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0