உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இணையவழி மோசடி: 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!.

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் இயங்கி வந்த பாரிய இணையவழி மோசடி வலையமைப்பை இலக்கு வைத்து இன்று விசேட சுற்றிவளைப்புச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ புலனாய்வு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களங்கள் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையில், அந்தப் பகுதிகளில் உள்ள ஐந்து தங்குமிட விடுதிகள் முற்றுகையிடப்பட்டு 134 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனைத்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அதிக விசாரணைகள் மூலம், இந்தச் சட்டவிரோத வலையமைப்புடன் தொடர்புடைய பிற நபர்களையும் கண்டறிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0