உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

‘தவ்ரது ரமழான்’ மாணவர்களுக்கான ரமழான் கால செயலமர்வின் பரிசளிப்பு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் தஃவா குழுவின் ஏற்பாட்டில், ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம் நடாத்திய “தவ்ரது ரமழான்” மாணவர்களுக்கான ரமழான் கால செயலமர்வின் பரிசளிப்பு நிகழ்வு கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

பள்ளிவாசல் பேஷ் இமாம் மெளலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,ரியாதி) அவர்களின் வழிநடாத்தலில், பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அல்-ஹாஜ் ஏ.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு விசேட அதிதியாக கலாநிதி, அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.பஷீர் (மக்கி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தஃவா குழுவினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலமாக்களான
முஹம்மட் ஷாமில் (ஹாமி), முஹம்மட் நப்ரிஸ் (ஸரயி), முஹம்மட் ரிப்னாஸ் (ஹாமி), முஹம்மட் நுஸ்கி (ஹாமி), முஹம்மட் இல்ஹாம் (ஹாமி) ஆகியோர் மாணவர்களுக்கு கற்பித்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

10 நாட்கள் கொண்ட ரமழான் செயலமர்வில் 65 மாணவர்கள் கலந்துகொண்டு அகீதா, பிக்ஃஹ், ஸீரா, அஹ்லாக், தஜ்வீத், பிக்ஃஹுஸ் ஸலா போன்ற பாடங்களை கற்று பரீட்சை நடத்தப்பட்டதில் வெற்றியாளர்களாக தெரிவானோருக்கு, முதலாம் பரிசாக ரூபாய் 10000.00 உம், இரண்டாம் பரிசாக ரூபாய் 8000.00 உம், மூன்றாம் பரிசாக ரூபாய் 6000.00 உம் இரு பகுதிகளாகவும் ஆறுதல் பரிசில்கள் ரூபாய் 2000.00 வீதம் 04 மாணவர்களுக்கும் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இவ் இலவச வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், உலமாக்கள், தஃவா குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

43 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

46 0 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

53 0 0