உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கிலன்டில் தோட்டத்தில் மரக்கிளைகள் முறிந்து வீழ்ச்சி: போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தின் கோர்த்தி பகுதியில் இன்று (9) மதியம் சுமார் 2.00 மணியளவில் பலத்த காற்று வீசியதனால் பெரிய வாகை மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக ஹட்டன் – மஸ்கெலியா பிரதான சாலையில் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததினால் தொலைதொடர்பு மற்றும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளதுடன், மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களும் காணப்படுகின்றன. தெய்வாதீனமாக, கிளைகள் விழுந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

மரத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் தேயிலைச் செடிகள் காணப்படுகின்றன. காலை வேளையில் அந்தப் பகுதியில் கொழுந்து பறிக்கும் பணி முடிக்கப்பட்டிருந்த நிலையில், மதிய வேளையில் பெண் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


பின்னர் முறிந்து விழுந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹட்டன் – மஸ்கெலியா பிரதான சாலையில் போக்குவரத்து மீண்டும் வழமையான நிலைக்கு திரும்பியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

37 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

39 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் முழுமையாக இரத்து.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி…

65 0 0