உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி விகாரையை முன்னிறுத்தி “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.இந்த நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆசிரியர் சங்கம் ஒழுங்கமைத்துள்ளது.


எதிர்வரும் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் மாலை 02.00 மணி முதல் 04.00 மணி வரை இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.வடக்கு – கிழக்குப் பகுதிகளில் சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் நில ஆக்கிரமிப்புகளில் முக்கியமாகக் கருதப்படும் தையிட்டி விவகாரத்தை மையமாகக் கொண்டு, அரச மதம் மற்றும் தனியார் காணி உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்களை ஆராய்வதேஇக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.


இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம. திருவரங்கன், சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தை இழந்த சா. சுகுமாரி ஆகியோர் கருத்துரைக்க உள்ளனர்.
மாணவர்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0