தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்.!
தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தையிட்டி விகாரையை முன்னிறுத்தி “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.இந்த நிகழ்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆசிரியர் சங்கம் ஒழுங்கமைத்துள்ளது.
எதிர்வரும் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் மாலை 02.00 மணி முதல் 04.00 மணி வரை இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.வடக்கு – கிழக்குப் பகுதிகளில் சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் நில ஆக்கிரமிப்புகளில் முக்கியமாகக் கருதப்படும் தையிட்டி விவகாரத்தை மையமாகக் கொண்டு, அரச மதம் மற்றும் தனியார் காணி உரிமைகள் தொடர்பில் எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்களை ஆராய்வதேஇக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம. திருவரங்கன், சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தை இழந்த சா. சுகுமாரி ஆகியோர் கருத்துரைக்க உள்ளனர்.
மாணவர்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.