தெமட்டகொடை இல்லத்தில் கைப்பற்றிய நகைகள் – ஒருவாரத்தில் விடுவிக்க நீதிமன்ற உத்தரவு.!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிம் இல்ஹாமின் தெமட்டகொடை மஹவில் கார்டன்ஸ் இல்லத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் மாணிக்கக்கற்களை ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25.02.2025) பிறப்பித்தார். சந்தேகநபரின் சகோதரரான இஃப்லால் அஹமட் என்பவருக்கு ஒருவார காலத்திற்குள் குறித்த சொத்துகளை விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இதேபோன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தபோதிலும், அதை நடைமுறைப்படுத்தாமல் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை நீதவான் கடுமையாக எச்சரித்தார்.மேலும், இவ்வுத்தரவை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றத் தவறினால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்தார்.